நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்: தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை - 55D கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்: மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Saturday 3 May 2014

கிராம மக்கள் உதவியோடு உருவாகும் சாயிப்பேராலயம்

காஞ்சி மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கீரப்பாக்கம் மலைகள் சூழ்ந்த மலைக்கிராமம். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கண்டிகை என்ற கிராமத்திலிருந்து உட்புறமாக மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஊர்.
இந்த ஊருக்கு அருகில் விளையாட்டுப்பல்கலைக்கழகம், யுனிடெக் நிறுவனம், காவலர் பயிற்சிக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளன.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உருவாக முக்கியக்காரணமாக இருந்த ராபர்ட் கிளைவ் காலத்தில் இருந்து இந்த ஊர் ஜமீன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு நிலஉச்சவரம்பு சட்டப்படி ஜமீன் சொத்து மக்களுக்கு உரியதாக மாறியது. இன்று ஜமீன் வாரிசுகள் சாதாரண குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
தற்போது இந்த ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அவரது மகன் சந்துரு ஆகியோர் ஜமீன் வாரிசுகள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த ஊர் மக்களின் முக்கியத் தொழில் கல் உடைத்தல் மற்றும் விவசாயம். பின் தங்கிய மக்கள் வாழும் இந்த கிராமம், இன்று கல்வி மற்றும் பிற துறைகளில் முன்னேறியுள்ளது.
இந்த ஊர்க்குடிமக்கள் கிராமத்திற்கே உரிய பண்புகளான உபசரிப்பு, கபடு இல்லாத குணம், பிறருக்கு உதவும் பரோபகாரத் தன்மை போன்ற உயர் குணங்களைக் கொண்டவர்கள்.
இந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக ஹரிக்கிருஷ்ணன் என்பவர் பதவி வகிக்கிறார். பதவி மோகமோ, பண ஆசையோ இல்லாமல் மிக எளிமையாக வாழ்க்கை நடத்துகிற இவர், அரசியல்வாதிகளில் ஆச்சரியப்படத்தக்க நபர். இவரை நமது சாயியுடன் சென்று சந்தித்த போது, ”இருக்கும்வரை பிறந்த ஊருக்கு ஏதேனும் நன்மை செய்துவிட்டுச் செல்ல வேண்டும். வேறு எதையும் நாம் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. பதவியை அதிகாரப் பொருளாகக் கருதாமல், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கிற ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன்” என்றார்.
உயரிய குணம் உள்ள சாயி பக்தரான இவரது ஆட்சிக்காலத்தில் இந்த ஊரில் பாபா ஆலயம் அமைவதும், அதிலும் தனது பக்தன் ஆளுகிற இடத்தில் தனக்கென இடத்தைத் தீர்மானம் செய்து பாபா பெறுவதும் சிலிர்க்க வைக்கிறது
ஊர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் வேலை வாய்ப்பு, பொருளாதார சாயிப் பேராலயம் கிராம மக்கள் உதவியோடு உருவாகும் மேம்பாடு, இந்த ஊரின் பெயர் சிறந்து விளங்குதல் என ஊர் நன்மையைக் கருதி, உயர்ந்த லட்சியங்களோடு, பாபா ஆலயம் அமைய வழி வகை செய்துள்ளார் இவர்.

சீரடி குக்கிராமமாக இருந்தபோது, பாபா கூறியது போல, எதிர்காலத்தில் இந்த ஊர் பாபா பக்தர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கும் ஊராக மாறும் என்றும், மக்கள் திரள் திரளாக இந்த ஊரை நோக்கி ஆன்மிகப் பயணம் வருவார்கள் என்றும் சாயி வரதராஜன் கூறியபோது, காசிலி சுவாமி சாய் சக்தி சுப்ரமண்யம் அவர்களும், ”அப்படித்தான் ஆகும்” என்று வழி மொழிந்தார்.
பாபா மாஸ்டர் அருணாச்சலம், இந்த ஊரைப் பற்றி சொல்லும்போது, ”எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், இருந்தாலும் அவையெல்லாம் கிள்ளுக்கீரை போல கிள்ளப்படும் இடமாக இந்த இடம் மாறும். பாபாவின் ஆகர்ஷண சக்தி இந்த இடத்தில் அதிகமாக உள்ளதால், யாரெல்லாம் இந்தப் புனிதத் தலத்தில் தடம் பதிக்கிறார்களோ, அவர்களது வாழ்வில் திருப்பு முனை நிச்சயம் ஏற்படும்” என்றார்.
இங்கு ஏற்படப் போகும் சிறப்பு என்னவெனில், ஒரே ஊரில் இரண்டு இடங்களில் பாபா தொடர்பான ஆலய அமைப்புகள் உருவாவதுதான்.
சாயி வரதராஜன் இந்த இடத்தை தேர்வு செய்தபோது, நாங்கள் சென்று பார்த்தோம். இது சாயி வரதராஜன் அல்ல, அவருக்குள் இருந்து அவரை இயக்குகிற சாயி பாபா தேர்வு செய்த இடம் என்பது புரிந்தது.
மிகச் சிறிய இடமாக இருந்தாலும் தனது ஆன்ம பலத்தால் அதை உயர்த்துகிற சாயி வரதராஜன், தனது கடவுள் சாயி பாபாவின் ஆணைப்படியும், ஆசியுடனும் இந்த இடத்தைத் தேர்வு செய்திருப்பது, இன்றைக்கு அற்ப விஷயமாகத் தெரியும். காலப்போக்கில் அவரது தேர்வு மிகச்சரியானது என்பது புரிய வரும்.
மற்ற இடங்களில் பாபாவுக்கு ஆலயங்கள் எழும்பும். சாயிப் பேராலயம் என்பது கீரப்பாக்கத்தில் மட்டுமே இருக்கும்.
இது சாயி ஆலயம் அல்ல, சாயி பேராலயம் என தீர்க்கதரிசியான டாக்டர் கிருபளானி ஆசி வழங்கி வாழ்த்திய நினைவுகள் எனக்கு புதுத் தெம்பை தருகிறது..
பண பலம், படை பலம் இல்லாமல் ஆன்ம பலத்தையும், அதிலுள்ள ஆண்டவன் பலத்தை மட்டுமே நம்பி திருக் கோயில் உருவாக்கும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளார் சாயி வரதராஜன்.
சாயி பாபாவை நேரில் தரிசிக்காதவர்கள், அவரது சேவையில் ஈடுபட்டு வரும் சாயி வரதராஜனை தரிசித்து அந்தக் குறையைப்போக்கிக் கொள்வதை நாம் அறிவோம். அந்தளவுக்கு மக்கள் மனதில் பக்தியை, நம்பிக்கையை வளர்த்து வாழ வைத்து வருகிறவர் அவர்.
மிக்சிறிய இடமான பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில், சாயி வரதராஜன் அவர்களின் பிரார்த்தனை மற்றும் வழிகாட்டுதலுடன் இன்று ஆயிரமாயிரம் மக்கள் புதிய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய இடத்தைத் தேர்வு செய்திருக்கிறார். இனி லட்சோப லட்ச மக்கள் நன்மை அடையப் போகிறார்கள்.
மலையில் கோயில் அமைவதற்குத் தடையற்ற சான்று, மாவட்ட ஆட்சியர் அனுமதி போன்ற காரணங்களுக்காகக்காத்திருக்கிறார்கள். விரைவில் பாபா ஆலய வரலாற்றிலும், தமிழகத்தின் மிக முக்கிய ஆலயங்கள் அமைந்த ஊர் வரிசையிலும் கீரப்பாக்கமும் இடம் பிடிக்கும். அந்தக் காலத்தைக்காண்பதற்கு உங்கள் உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டுகிறார் நமது சாயி பாபா.
யாரும் ஏழைகள் இருக்கக்கூடாது, பசி பட்டினியோடு இருக்கக்கூடாது. அனைவரும் சமமாக, சம உரிமையுடன் வாழ பாடுபடுவதே உண்மையான சாயி பக்தர்களின் கடன். இதை நிறைவேற்றும் இடமாக மாறுகிறது இந்த கிராமம்.
                                                           சாயி வீரமணி

No comments:

Post a Comment